சூலூரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது-1850 கிராம் கஞ்சா பறிமுதல்..!

கோவை அருகே உள்ள சூலூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு அதே பகுதியில உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது மறைவான இடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1850 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகவ் பகர்தி (வயது 22) என்பது தெரிய வந்தது.