வீட்டின் முன் நிறுத்தி இருந்த புல்லட் பைக் திருட்டு..!

கோவை சிங்கநல்லூர், நீலி கோணாம்பாளையம், ராமசாமி நகரை சேர்ந்தவர் ராம் ஷியாம் பிரவீன் (வயது 29)இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டின் முன் தனது புல்லட் பைக்கை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.