கோவையில் 1100 கிராம் கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது..!

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தில்லை நகர் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக சுக்கிரவார்பேட்டை கணேஷ் பாரதி ( வயது 27) கவுண்டம்பாளையம் அரி கிருஷ்ணன் ( வயது 22) பிரபு நகர் விஜய் ( வயது 22) ரத்தினபுரி பி .எம். சாமி. காலனி கிறிஸ்டோபர் வயது 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 1100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது . மேலும் விசாரணை நடந்து வருகிறது..