கோவைக்கு லாரியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில டிரைவர் கைது..!

கோவை :பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நேற்று அவிநாசி- கோவை சர்வீஸ் ரோட்டில் ,கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 1,050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதைக் கடத்தி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சந்தன்குமார் ( வயது 20) கைது செய்யப்பட்டார்.லாரியும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.