கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று விசாரணை..!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி நடந்த கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷாமுபின் (வயது 28) என்பவர் உடல் கருகி பலியானார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என். ஐ.ஏ விசாரித்து வருகிறது. கைதான முகமது அசாருதீன், முகமதுதல்கா, அப்சர் கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் முகமது நவாஸ் இஸ்மாயில், ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ.காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கைதான 6 பேரையும், இன்று கோவைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சத்தியமங்கலம் காட்டுக்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.