கோவையில் கொள்ளையடிக்க இடையூறாக இருப்பதாக நாய்களை திருடும் மர்ம நபர்கள்- காவல் நிலையத்தில் பெண் பரபரப்பு புகார்..!

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தனி, தனி வீடு உள்ளது. அப்பகுதியில் கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அவர் வீட்டில் இரண்டு நாய்கள் வளர்ந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடும். இதனால் அவர்கள் பயமின்றி வாழ்ந்து வந்ததாகவும், இந்நிலையில் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது ஒரு நாய் காணவில்லை. இதனைக் கண்டு பகுதியில் சிறிது நேரம் தேடி வந்தனர். பின்னர் அது தானாக வந்து விடும் என எண்ணி வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் இரவு நேரத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டதாகவும், வன விலங்குகள் அப்பகுதியில் நடமாட்டம் இருப்பதால் அதற்காக நாய்கள் சத்தம் போடுவதாக நினைத்து உறங்கி விட்டதாகவும், பின்னர் காலை எழுந்து பார்க்கும் போது அந்த மற்றொரு நாயும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற தடயங்கள் இருந்ததாகவும், இதுகுறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டிற்கு புகுந்து கொள்ளை அடிக்கும் நபர்கள் நாய்களின் சத்தத்தால் பயந்து வந்த நிலையில், அதனை திருடி விட்டால் அவர்கள் அப்பகுதியில் கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் திருடி இருக்கலாம் என்றும் கூறினார்.

நாய்களை திருடி கொள்ளை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடலாம் என பெண் புகார்களுக்கு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது