சூலூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது..!

கோவை அருகே உள்ள சூலூர் எம்.ஜி.ஆர். நகர் சேர்ந்தவர் இப்ராகிம். அவரது மகன் முத்துகாதர் ( வயது 29 ) கூலி தொழிலாளி இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இவர் வீட்டின் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போன்” ஸ்விட்ச் ஆப் ” ஆனதால், தனது மனைவியின் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டு சூலூர் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தனது அருகில் உள்ள சிலர் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து முத்துக்காதரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்காதரை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்