திருச்சியில் லாரி மீது கல்லூரி பேருந்து மோதல் 8 பேர் காயம்…

திருச்சி-திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் பிரபல பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு கல்லூரியிலிருந்து புறப்பட்டது. ராம்ஜி நகா் பகுதியில் வந்தபோது, சுமை ஏற்றிக் கொண்டு பக்கவாட்டிலிருந்து வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 8 பேர் காயமடைந்தனா்.
தகவலறிந்த ராம்ஜி நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். லாரியின் பின்பக்கம் பஸ் மோதியதே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது