2 லட்சம் மதிப்புள்ள இரண்டு மாடுகள் மர்ம மரணம்-போலீசார் விசாரணை..!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடப்பட்டியில் (லேட்) செல்லன் மனைவி ராமுத்தாய் என்பவர் வசித்து வருகிறார்

இவர் கணவர் இறந்த பிறகு தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் வளர்த்து அதில் வரும் வருவாயை வைத்து ஜீவனம் செய்து வருகிறார்

அதனைத் தொடர்ந்து இரவு மாடுகள் இரண்டிற்கும் தீவனம் வைத்து மாடுகளை கட்டுத்துறையில் கட்டி விட்டு உறங்கச் சென்று சென்றார்

அதன் பிறகு நேற்று  அதிகாலைப் பொழுதில் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு மாடுகளும் கட்டுத்துறையிலேயே மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூறி அழுததைகண்ட பொதுமக்கள் அனைவரும் கண்களங்கி
நின்றனர். முன்னதாக இரண்டு மாடுகளுக்கும் மர்ம நபர்கள் விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ராமுத்தாய் மகன் ராமராஜ் என்பவர் செம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் செம்பட்டி காவல் துறையினர் மாடுகள் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.