தொழில் தொடங்குவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி- கோவை ஓட்டல் அதிபர் மீது புகார்..!

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள அங்கண்ண தேவர் விதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48 )இவர் ஒரு பத்திரிக்கையில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்த அஜய் பிரசாத் என்பவரிடம் விவசாய தொழில் தொடங்குவது தொடர்பாக ரூ 10 லட்சம் கொடுத்தாராம். அந்த பணத்தை அவர் தொழில் தொடங்காமலும், திருப்பிக் கொடுக்காமலும் மோசடி செய்து விட்டார் .இது குறித்து பிரபாகரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அஜய் பிரசாத் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.