மில்க் டைரியில் பணம் அபேஸ்- ஊழியர் கைவரிசை..!

கோவை கணபதி எப் .சி .ஐ .குடோன் ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவரது மனைவி அபிநயா (வயது 34) மில்க் டைரி நடத்தி வருகிறார் .இவரிடம் வேலூர் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ.1 லட்சம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து அபிநயா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்..