பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம்

பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: கோவையில் பதற்றம்

மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் பதற்றம்….

நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு சுமார் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பின் நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள பரபரப்பான சாலையில் நேற்றிரவு மதன்குமார்,சச்சின் உள்ளிட்ட இருவருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளை பணி முடிந்து மூடி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர்,இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடைகளின் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர்,உள்ளே சென்ற பணியாளர்கள் அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் வெளியே நின்றவாறு உள்ளே பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் திரியை வைத்து தூக்கி வீசியுள்ளனர் என்பதை அறிந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.சில பிளைவுட்களும் எரிந்துள்ளன.

பிரதான சாலையில் நடைபெற்ற இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.