திருச்சியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்ற அமைச்சர்..!

கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்வு நடைப்பெற்றது. மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் இந்து மத சைவ வைனவ குருக்கள் அர்ச்சகர்கள் கிராம கோவில் பூசாரிகள் கிறிஸ்தவ பாதிரியார்கள் இஸ்லாமிய இமாம்கள் உள்ளிட்டவர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் ,சேகரன் வன்னை அரங்கநாதன் செந்தில் – மாவட்ட – மாநகர நிர்வாகிகள் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.