கோவை வியாபாரி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு..!

கோவை வெள்ளலூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள திருவாதிரை நகரை சேர்ந்தவர் லிங்கசாமி ( வயது 55) வியாபாரி. இவர் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தார் .நேற்று திரும்பி வந்தார். அப்போ வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லிங்கசாமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ராஜா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..