தஞ்சையில் ஆண்களுக்கான இறகு பந்து போட்டி.!!

தஞ்சாவூர் சுசிலா முருகையன் அறக்கட்டளை சார்பாக ,ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ,ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது.

இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டியில் முதல் பரிசை அறிவழகன், ஆனந்த் மற்றும் டாக்டர் .விமல், ஏ ஆர் .கோபால் ஆகியோரும் பெற்றனர் .

சிறப்பு அழைப்பாளராக அபெக்ஸ் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். சிவசங்கர் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை பாராட்டையும், இதய நோய் சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். முனைவர் தமிழ்ச்செல்வன், முருகையன், முருகையன் , சாமிநாதன்,ராஜன், மேனகா, ஹரிஹரன், பாண்டியன் ஆகியோர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பேசினர் . இப்போட்டியை,சுசிலா முருகையன் நினைவு அறக்கட்டளை தலைவர் சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தார்..