தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்- மா.சுப்பிரமணியன் தகவல்.!

சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்தார்.