மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு.!!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்..