கோவையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது..!

கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கையம் பகுதியை சேர்ந்தவர் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளே தூங்க சென்றார்.
காலை எழுந்து வந்து வெளியே பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. தனது மோட்டார் சைக்கிளில் திருட்டு போனதை அறிந்த அவர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த சாம்பிரவின் (19) மற்றும் நிகில் (20) ஆகியோர் பிரிசனின் மோட்டார் சைக்கிளிலை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளிலை திருடிய நிகிலை கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது நண்பர் சாம்பிரவினை தேடி வருகின்றனர்.