கத்தி முனையில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு..!

கோவை பீளமேடு. நேரு நகர் பகுதியில் வசிப்பவர் சந்தியா ( வயது 21) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்று விட்டு தனது அக்கா சுகந்தியுடன் கோவைக்கு வந்தார்..வீட்டுக்குள் வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி சந்தியா கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினையும், அவர் கையில் வைத்திருந்த ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான் .இது குறித்து சந்தியா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..