வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ 2 லட்சம் பணம் திருட்டு- கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகர், மகாலட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவரது மனைவி ஸ்ரீதேவி, (வயது 38.) இவர்கள் கடந்த, 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சேலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.நள்ளிரவு, 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.அப்போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம், ரூ2 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள், திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஸ்ரீதேவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உடனடியாக சிசிடிவி கேமரா அமைக்குமாறு அங்குள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.