கோவை நகைக்கடை திருட்டு

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம்573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, செந்தில்குமார், ராஜேஷ்,மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.இவர்கள் தீவிரமாக துலக்கிகொள்ளையன் யார் ?என்பதை அடையாளம் கண்டனர்.ஆனைமலையில்பிடிக்க முயன்றபோதுவீட்டில் ஓட்டை பிரித்து வெளியே குதித்து கொள்ளையன்விஜய் தப்பி சென்று விட்டான்.அவரது மனைவி நர்மதா விடம்கொடுத்து வைத்திருந்த 3 கிலோ தங்க -வைர நகைகள் மீட்கப்பட்டது.மேலும் அவரது மாமியார் யோக ராணி தர்மபுரியில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 35 கிராம்தங்க வைர நகைகளை போலீசார் நேற்று மீட்டனர்.தலை மறைவாக உள்ள கொள்ளையன் அஜய்யை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்..இன்னும் 235 கிராம் நகைகள் மற்றும் மீட்கப்பட வேண்டியது உள்ளது.இதில் 2 கைச்செயின், 2 தங்க மோதிரம்,ஒரு செயின் ஆகியவற்றை கொள்ளையன் அஜய் உடலில் அணிந்து உள்ளான்.இந்த நிலையில் கொள்ளையன் விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்று அதிகாலையில் தனிப்படை போலீசார் அவன் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர் .அப்போது அவன் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றான். போலீசார்அவனை துரத்தி சென்றனர். அப்போது கால் தவறி பள்ளத்தில் விழுந்தான்.இதில் அவனுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.போலீசார் அவனைமின்னல் வேகத்தில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.அனைத்து நகைகளும் மீட்கப்பட்டது.அவனை போலீசார் கோவைக்கு அழைத்து வருகிறார்கள்.