பைக் திருட்டு: 2 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 20 )இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள சாமி செட்டிபாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த வீட்டின் முன் பைக்கைநிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கைகாணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஜனார்த்தனன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியநாயக்கன்பாளையம் பாரதிநகரை சேர்ந்த வேல்ராஜ் (வயது 20) அபிஷேக் (வயது 19) பிரவீன் குமார் (வயது 19) ஆகியோர கைது செய்தனர். இவர்களில் பிரவீன் குமாரும் அபிஷேக்கும் மாணவர்கள் ஆவார்கள் .வேல்ராஜ் சிஎன்சி ஆப்பரேட்டராக உள்ளார் .இது தொடர்பாக சென்னையைசேர்ந்த சத்யா என்பவரை தேடி வருகிறார்கள் .இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணன் நகரை சேர்ந்த அருண்குமார் ( வயது 24) என்பவரது வீட்டின் முன் நிறுத்தியி ருந்தமோட்டார் சைக்கிளையும்திருடியது தெரியவந்தது .இவர்களிடம்இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது..