சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வடமாநில வாலிபர் போக்சோவில் கைது.!!

கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் குல்ஷான் அகமது (வயது 23) இவர் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து 3 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் அது காதலாக மாறியது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கண்டித்தனர்.இது பற்றி சிறுமி காதலனிடம் கூறியுள்ளார். குல்ஷான் அகமது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி சென்னைக்கு கடத்திச் சென்று தனது நண்பரின் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை மீட்டனர். விசாரணையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குல்ஷான் அகமதுவை கைது செய்தனர் .பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..