ரேஷன் அரிசி கடத்தல்… கோவையில் 871 பேர் கைது – போலீஸ் ஐ.ஜி .காமினி அதிரடி நடவடிக்கை.!!

கோவை மண்டல குடிமை பொருள் குற்றப்பலனாய்வுத் துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குடிமை பொருள் வழங்கல்குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் கோவை நீலகிரி, ஈரோடு, , திருப்பூர், சேலம், , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மேற்கு மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6 மாதத்தில் கோவை மண்டலத்தில் ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3ஆயிரம் டன் ரேஷன் அரிசி 26 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அரசு மானிய விலையில் வழங்கும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .445 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது .டீசல் பதுக்கி வைத்தது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு 1500 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது .ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 154 இருசக்கர வாகனங்களும் 14 மூன்று சக்கர வாகனங்கள் 82 நாள்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 165 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் மீது கள்ளச் சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 385 வழக்குகள் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நீதிமன்ற மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..