சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, கோடங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 20) டிரைவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மனைவியை காதலித்தார். அப்போது விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியை ஆனைமலை, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விக்னேஷ் அந்த மாணவியை பழனிக்கு கடத்திச் சென்று அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இதனிடையே பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கடந்த 18- 6- 2019 அன்று ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .இந்த புகாரின் பேரில் விக்னேஷ் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பானவழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பளித்தார். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் விக்னேஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.