கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 வடமாநில தொழிலாளர்கள் கவலைக்கிடம்..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பிள்ளையப்பன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.நேற்று தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர்..அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அந்த அறையில் தங்கியிருந்த தனம் வீர்சிங் தாமர் (வயது 35 )தனன் ஜெய்சிங் (வயது 33) வீரேன்டூ ரே ஜா (வயது 37) மகாதேவ சிங் (வயது 23 )அனுராக் சிங் தாமர் ((வயது 28) ஆகியோர் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.