பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும் – ராஜ்நாத் சிங் உறுதி..!

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீ நகரில் சௌரிய திவஸை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி கில்ஹிட் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளை அடைந்த பிறகு முழுமை பெறும் என கூறினார்.

அவை இப்பொது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் பகுதிகளாக உள்ளன, இந்தியாவை முதுகில் குத்தியதாக பாகிஸ்தான் மீது சாடிய ராஜ்நாத் சிங் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது பாகிஸ்தான் ஒடுக்கு முறையை ஏவி விடுவதாக கண்டனம் தெரிவித்தார்.