உலகின் மிக உயரமான சிவன் சிலை: ராஜஸ்தானில் இன்று திறப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்த்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள 369 அடி உயர சிவன் சிலை ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ இன்று  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.

இதை கட்டிய தட் பதம் சன்ஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், ‘உலகின் மிக உயரமான சிவன் சிலை இது (உள்ளே) பக்தர்களுக்கான மண்டபம். உள்ளே செல்ல நான்கு லிப்டுகள், மூன்று படிக்கட்டுகள் உள்ளன’ என்றார்.