கடன் தொல்லையால் நகைத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை :கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஆலத்துறையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42 |இவர் கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து நகை தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார் .இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் மின் விசிறியில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சுகுணா வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.