கோவை கல்லூரி பேராசிரியை வீட்டில் 30 பவுன் நகை திருட்டு- 2 பெண்கள் மீது புகார்..!

கோவை சாய்பாபா காலனி 8 – வது கிராசில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் குருஞானாம்பிகை (வயது 47)இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் இறந்து விட்டார். இவர் தனது தாயாருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு குழந்தையுடன் 2 பெண்கள் வந்தனர். அவர் வேலை செய்துவிட்டு சென்றபோது வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வேலைக்கு வந்த அந்த பெண்கள்தான் திருடி இருப்பதாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.