சயனைடு தின்று நகை தொழிலாளி தற்கொலை..

கோவை செல்வபுரம் என் .எஸ் . கே .ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 33) இவர் ஆர் .எஸ் . புரம் தியாகி குமரன் வீதியில் உள்ள நகைப் பட்டறையில் நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி 2022 ஆம் ஆண்டு இவரை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று குடிபோதையில் பட்டறையில் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.