கோவை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை கட்டிப் பிடித்து பாலியல் தொல்லை – வாலிபர் கைது..!

கோவை :சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார். விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரத்தில் 4நாட்கள் விடுமுறை என்பதால் அந்த மாணவி தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன் தினம் இரவு கோவை காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு வந்தார் .அங்கிருந்து அவர் படித்து வரும் கல்லூரிக்கு செல்வதற்காக டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒருவர் திடீரென்று அந்த மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையத்தைச் சேர்ந்த ரூபன் ( வயது 24) என்பதுதெரியவந்தது. இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார். .சொந்த வேலை காரணமாக கோவை வந்தவர் குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.