கோவை கல்லூரி மாணவர் மீது தாக்குதல்-3 பேர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஆனந்த் (வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ .மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் அங்குள்ள கோகுலம் காலனியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் இவரை வழிமறித்து தாக்கினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆனந்த் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு செய்து 3 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.