குடிபோதையில் மோதல்… மனைவியின் அக்கா கணவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் ( வயது 36) இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதைப் போன்று கவிதாவின் தங்கை சத்யா. அவரது கணவர் சசிகுமார் (வயது 33) அவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் உன்னிகிருஷ்ணனை விட்டு பிரிந்து அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் கவிதா வசித்து வருகிறார். இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக சத்யாவின் கணவர் சசிகுமாருக்கும், கவிதாவின் கணவர் உன்னி கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்தனர். மாலை 4 மணி அளவில் தாத்தூர் தண்ணிர் டேங்க் பகுதியில் அவர்கள் சந்தித்துக் கொண்டனர். அப்போது திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சசிகுமார் ஆத்திரமடைந்து உன்னிகிருஷ்ணனை தாக்கி கீழே பிடித்து தள்ளினார். பின்னர்அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து உன்னிகிருஷ்ணன் தலையில் போட்டார். இதில் பலத்தக் காயம் அடைந்த உன்னிகிருஷ்ணன் அதே இடத்தில் இறந்தார். உடனே அங்கிருந்து சசிக்குமார் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பப இடத்துக்கு சென்று உன்னிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சசிகுமாரை தேடி வருகிறார்கள்.மனைவியின் அக்கா கணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.