ஓடும் பேருந்தில் தொழிலாளியிடம் ரூ.60 ஆயிரம் திருடிய ஆட்டோ டிரைவர் கைது..!

கோவை அருகே உள்ள எட்டிமடை அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி . இவர் நேற்று துடியலூரில் இருந்து ஆர். எஸ் புரம், புரூ பீல்டுக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ 60 ஆயிரத்தை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அவரை விஜயகுமாரும் சக பயணிகளும் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து ஆர்.எஸ். புரம் போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, திருநகரை சேர்ந்த ரவி ( வயது 47) என்பது தெரிய வந்தது. இவர் கோவையில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவரிடம் இருந்து பணம் ரூ 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது..