ஐ.டி. ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.!!

கோவை அருகே உள்ள கீரணத்தம் ஐ.டி. பார்க் ரோட்டை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 30) அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று முன் தினம் இவர் ஓரினசேர்க்கை செயலி மூலம் அறிமுகமான 2 நண்பர்களுடன் சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் தமீம் அன்சாரியை தாக்கி தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த தமிழ் அன்சாரி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.