மகனுடன் பைக்கில் சென்ற தாய் கீழே விழுந்து பலியான பரிதாபம்..

கோவை பேரூர் பக்கம் உள்ள காளம் பாளையம், கந்தவேல் நகரை சேர்ந்தவர் ராஜன், இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 52) இவர் நேற்று தனது மகன் அஸ்வினுடன் (வயது 21 ) பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று நிலைதடுமாறி பைக்குடன் அஸ்வினும் லட்சுமி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல்தாய் லட்சுமி இறந்தார். மகன் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பேரூர் போலீசார் அஸ்வின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.