தண்ணீர் தொட்டியில் விழுந்து விவசாயி மரணம்..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்ல பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 45) விவசாயி. நேற்று இவர் நல்லாபாளையம், பெரிய கவுண்டர் தோட்டம் பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி புனிதா அங்கு சென்று பார்த்தார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் கணவர் கிடந்தார்.அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.