நகை, பணம் கேட்டு மனைவிக்கு வரதட்சணை கொடுமை… கணவர், மாமனார், மாமியார் உட்பட 5 பேர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!

கோவை அருகே உள்ள காளப்பட்டி, சுபர்சன் கார்டனை சேர்ந்தவர்ஆர்த்தி (வயது 23) இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த வியாபாரி ஜிதேந்திரா ( வயது 24 )என்பவருக்கும் 8 -11- 20 21 அன்று திருமணம் நடந்தது .திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர்கள் 125 பவுன் நகையும் 2 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தனர் .ஒரு மாதம் கழித்து மேலும் 200 பவுன் நகையும்,பணமும் வாங்கி வருமாறு கூறி ஆர்த்தியை கணவர் விட்டார் கொடுமைப்படுத்தினார்கள் ..இந்த நிலையில் ஆர்த்தியின் பெற்றோர்கள் மேலும் 150 பவுன் நகையும், ரூ8 லட்சமும் கொடுத்தனர்.இது போதாது மேலும் வேண்டும் என்று கேட்டு கணவரின் குடும்பத்தினர் ஆர்த்தியைடார்ச்சர் செய்து உளைச்சல் ஏற்படுத்தினார்களாம். இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி அனைத்துபெண்கள் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கணவர் ஜிதேந்திரா (வயது 24) மாமனார் செந்தில்குமார் மாமியார் சத்திய பிரியா, உறவினர்கள் தெய்வசிகாமணி, ரேவதி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை நம்பிக்கை மோசடி உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.