நின்றிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் பேர்ணாம்பட்டு அடுத்த ஓனாங் குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இரண்டு வேன் மூலம் மைசூருக்கு சுற்றுலா சென்று ஊர் திரும்பிய நிலையில் இன்று அதிகாலை நாட்றம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று பழுதாகி சாலையோரமாக நின்றிருந்த நிலையில் வேனில் பயணித்தவர்கள் வேனிலிருந்து இறங்கி தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியம் தடுப்பின் மீது அமர்ந்திருந்தனர் .

எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி பழுதாகி நின்ற வேன் மீது பின்பக்கமாக பலமாக மோதியதில் வேன் சாலையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது கவிழ்ந்த விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 14க்கு மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.