இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா… அவசர நிலை பிரகடனம்..!

ஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஏழு மாதங்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது. காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 34 ஆயிரம் பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும், நாட்டில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அமெரிக்காவிலும் மாணவர்கள் காஸா மீது இஸ்ரேல் போர் தொடுப்பதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.