உக்கடத்தில் பணம் பட்டுவாடா..?துணை ராணுவத்தினர் அதிரடி சோதனை.!!

கோவை :நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் நேற்று இரவு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன் பேரில் பறக்கும் படை அதிகாரி ராதிகா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேலு, துணை ராணுவத்தினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களுக்கு யாரும் பணம் பட்டுவாடா செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அந்த பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது..