வேலை செய்யும் போது இரும்பு ஜன்னல் மார்பில் விழுந்து வெல்டர் பரிதாப பலி..

கோவை : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 39) வெல்டர். இவர் கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியில் கோபிநாத் என்பவரின் சொந்தமான வீட்டில் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்து கொண்டிருக்கும் போது இரும்பு ஜன்னல் அவரது மார்பில் தவறி விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவர் தந்தை கணேசன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..