பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டி பரிசளிப்பு விழா..!

திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்டக்கழகம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி 27.08.23 முதல் 28.08.23 இரண்டு நாட்கள் நடைபெற்றது. எட்டு பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி அணியும், மதுரை புனித மரியன்னை மேனிலைப் பள்ளி அணிகளும் மோதின.இறுதிப் போட்டிக்கு தமிழ்ச்செல்வன் தலைமையில் அருண் சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்.இறுதிப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு முன்னால் மாணவர் இயக்க முதன்மைப் புரவலர்கள் குப்புசாமி சண்முகம் தலைமை தாங்க பள்ளியில் அதிபர் மரிவளன் தாளாளர், அருள்தாஸ் தலைமையாசிரியர், அருள்பணி ஆரோக்கியதாஸ், சேவியர், ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினர்களாக மதுரை மறை மாநில இயேசு சபைத் தலைவர் அருள்முனைவர் தாமஸ் அமிர்தம், ஆடிட்டர் வெங்கட்ரமணன் கலந்து கொண்டு பரிசு வழங்கி சிறப்பித்தனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்தாட்ட கழகச் செயலாளர் சண்முகம், புனித மரியன்னை மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர் இயக்கத்தலைவர் வீரமணி, செயலாளர் தேவராஜ், பொருளாளர் மைக்கேல், லாரன்ஸ், மரிய ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்..