வடிவேல் பட பாணியில்.. முன்னாள் வங்கி மேலாளர் வீட்டில் மிளகாய் பொடி தூவி 19 பவுன் நகை திருட்டு- மர்ம ஆசாமிகள் கைவரிசை..!!

கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம் ( வயது 81 )இவர் ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.கடந்த 27ஆம் தேதி சுப்பிரமணியத்தின் மகன் தன் மனைவியுடன் பாலக்காடு சென்று விட்டார்.சுப்பிரமணியம் வீட்டை பூட்டி விட்டு சாய்பாபா காலனியில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த 19 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர் .வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது.போலீஸ் துப்பறியும் நாய் மோப்பம் பிடிக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை தரையில் கொள்ளையர்கள் தூவி உள்ளனர்.இது குறித்து சுப்பிரமணியம் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.