கோவை டாக்டர் வீட்டில் நகை- வெள்ளி பொருள் திருட்டு,.!

கோவை டாக்டர் வீட்டில் நகை- வெள்ளி பொருள் திருட்டு,.! கோவை அருகே உள்ள வடவள்ளி, ராமசாமி நகர், நேருவைதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 33 ) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுகுடும்பத்துடன் சென்னையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள்- 800 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டு இருந்தது .இது குறித்து விஜயகுமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.