நள்ளிரவில் ஏ.டி.எம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி – திருடன் கைது..!

கோவை ஆர் .எஸ் .புரம் .காந்தி பார்க் ரவுண்டானா அருகே எஸ் .பி. ஐ .வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒரு கொள்ளையன் உள்ளே புகுந்தான். அங்கிருந்த சிசிடிவி கேமராவை இழுத்தான் இதனால் அபாய மணி ஒலித்தது .இது தொடர்பாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் தகவல் கிடைத்தது.இதுகுறித்து ஆர் எஸ் புரம் போலீசுக்கு.தகவல் தெரிவிக்கப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டை ,நேரு நகரை சேர்ந்த வனராஜா ( வயது 33| என்பவர் தான் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. போலீசார் இவரை கைது செய்தனர்.இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.