கோவையில் நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பெண் லேப் டெக்னிசீயர்- போலீசார் விசாரணை..!

கோவை :  நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி அருகே உள்ள மருதகுளம்பட்டி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவரது மகள் மேகலபிரியா (வயது 26). கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேட்டில் உள்ள ஒரு லேப்பில் டெக்னிசீயனாக வேலை பார்த்து வந்தார்.
இதற்காக மேகல பிரியா ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் அறை எடுத்த தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று இவர் வேலைக்கு செல்லவில்லை. இதனையடுத்து அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன் மூலம் மேகலபிரியாவை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றனர். அப்போது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது மேகலகபிரியா நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மேகல பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை வைத்து கடைசியான மேகலபிரியா யாருடன் பேசினார். காதல் விவகாரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேகலபிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். அவரை ரத்தினபுரி போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் லேப் டெக்னிசீயன் நிர்வாண நிலையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.