கோவையில் ஆட்டோ டிரைவர் வீட்டின் பூட்டை திறந்து தங்க நகை, வெள்ளி கொள்ளை..!

கோவை அருகே உள்ள பிஎன்.புதூர், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நவீன் குமார் ( வயது 32 ) ஆட்டோ டிரைவர் . இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டில் உள்ள ஜன்னலில் மறைத்து வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், எட்டு கிராம் செயின் , 8 கிராம் வெள்ளி செயின் ஆகியவற்றை காணவில்லை. யாரோ ஜன்னலில் சாவி வைப்பதை பார்த்து வீட்டை திறந்து திருடி சென்றுள்ளனர். இது குறித்து நவீன்குமார் ஆர். எஸ். புரம், போலீசில் புகார் செய்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர்பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.