தோட்டத்து பண்ணை வீட்டில் சூதாட்டம்: 11 பேர் கைது- ரூ.1.42 லட்சம், 7 இருசக்கர வாகனம் பறிமுதல்..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஒரு தோட்டத்து பண்ணைவீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்குநேற்று மாலை ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தார். அங்கு சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த பாபுராஜ் ( 34 )ஆனந்தகுமார் ( 48 ) குமார் (55) விஜயன் (|49) சந்திரன் (32) ஆனந்த்பாபு ( 36 )ராஜேஷ்குமார் ( 33 ) தணிகாசலம் ( 58 )மாதவன் ( 40 )தாமோதரன் (22) கிருஷ்ணமூர்த்தி ( 55 ) ஆகியோர கைது செய்தார். சீட்டாட பயன்படுத்தப்பட்ட ரூ 1லட்சத்து 42 ஆயிரத்து300 பணமும், 7 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.11 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.